BREAKING NEWS

கும்பகோணத்தில் மாநகராட்சி 3 புதிய நகர்ப்புற நல்வாழ் மையங்கள் 75 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு விழா எம் .பி , எம்.எல்.ஏ பங்கேற்பு.

கும்பகோணத்தில் மாநகராட்சி 3 புதிய நகர்ப்புற நல்வாழ் மையங்கள் 75 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு விழா எம் .பி , எம்.எல்.ஏ பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் மூன்று நகர்ப்புற நகர மையங்கள் தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க அன்பழகன் ஆகியோர் பங்குபெற்று குத்து விளக்கினை ஏற்றி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் கும்பகோணம் நகர்ப்புற பகுதிகளில் மூன்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இம்மருத்துவ சேவைகளை மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் வண்ணம் சுமார் பத்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு புதிய நகர் புற நல்வாழ்வு மையம் வீதம் மூன்று புதிய நகர்ப்புற நலவை மையங்கள் ஒவ்வொன்றும் ₹25 லட்சம் அளவில் மூன்று நகர்புற நலவல் மையங்கள் ரூபாய் 75 லட்சத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டு இன்று தமிழக முதல்வரால் காணொளி காட்சி திறந்து வைக்கப்பட்டது.

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.

CATEGORIES
TAGS