BREAKING NEWS

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் கொள்ளையடித்த நகைகளை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கை மணிக்கட்டை வெட்டியதால் பரபரப்பு.

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் கொள்ளையடித்த நகைகளை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கை மணிக்கட்டை வெட்டியதால் பரபரப்பு.

 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பாண்டிச்சேரி காலம்பட்டு களிமேடு குப்பம் பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுகன் வயது 28 திருட்டு வழக்கில் புதுச்சேரி சிறைச்சாலையில் புதுச்சேரி சேர்ந்த சுரேஷ் மாடக்குடி சேர்ந்த ராமு மூன்று பேரும் சிறைச்சாலையில் நண்பராக பழகி வந்தனர்.

 

இந்நிலையில் திப்பிராஜபுரம் மனவெளி தெருவில் உள்ள தனது மாமா வீட்டில் சுரேஷ் சுரேஷின் அண்ணன் சுதாகர் மற்றும் ராமு மூன்று பேரும் தங்கி உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் அண்ணன் சுதாகர் சுகனின் இரு சக்கர வாகனத்தை வெளியே எடுத்து சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை சுரேஷின் அண்ணன் சுதாகர் தேடி வண்டி கேட்டு போது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

 

 

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அவரது அண்ணன் சுதாகர் மற்றும் ராமு ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சுகன் கையின் மணிக்கட்டு துண்டாக வெட்டி தப்பி சென்று விட்டனர்.

 

இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது இவர்கள் மூன்று பேரும் வழிபறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து நகைகளை பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் சுகன் கையை வெட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

 

இது குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டுப்பட்ட சுகனை கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நாச்சியார் கோவில் காவல் துறை வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

CATEGORIES
TAGS