குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் குறுவட்ட பகுதிகளான சேப்பாக்கம், வேப்பூர், நல்லூர், பெரியநெசலூர், சிறுநெசலூர், சிறுபாக்கம், அடரி ஆகிய கிராமங்களில் ஒருசில உட்பிரிவு கோப்புகள் குறுவட்ட நில அளவையரால் நிராகரிக்கப்படுவதாகவும் நில அளவியர்கள் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக பணம் கொடுக்கும் கோப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதாகவும், பணம் கொடுக்காத கோப்புகளை எந்த ஒரு காரணமும் இன்றி தள்ளுபடி செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் வேப்பூர் வட்டாட்சியர் கோப்புகள் தள்ளுபடி செய்யப்படுவதற்கான என்ன காரணம் என்று தீர்க்கமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் உட்பிரிவு கோப்புகள் தள்ளுபடி செய்வதை எதிர்த்து கிராம நிர்வாக அலுவலர்கள் விரைவில் போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது.