குறுவை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக குறுவை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) சேகர், துணை இயக்குநர் (ம) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் உள்ளனர்.
CATEGORIES மயிலாடுதுறை
