BREAKING NEWS

குழந்தை பிணத்தை 10 கிலோமீட்டர் கையில் சுமந்து சென்ற பெற்றோர்!!”

குழந்தை பிணத்தை 10 கிலோமீட்டர் கையில் சுமந்து சென்ற பெற்றோர்!!”

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லேரி மலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய் இவரது மனைவி பிரியா இவர்களது 1 1/2 வயது மகள் தனுஷ்கா.

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்தது.

இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்பொழுது குழந்தையை பாம்பு கடித்தது தெரியவந்து உடனடியாக அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதமானது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

 

தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தையை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

குழந்தை உடலை வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் அத்தி மரத்து கொள்ளை கிராமத்திற்கு கொண்டு சென்றனர். கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்டனர் பின்னர் இறந்த குழந்தை பிணத்தை 10 கிலோமீட்டர் தூரம் கையில் சுமந்து சென்றனர்.

பாம்பு கடித்த உடன் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் ஆனால் ஆனால் சாலை வசதி இல்லாததால் உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல முடியவில்லை.

மேலும் இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

CATEGORIES
TAGS