BREAKING NEWS

கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்பொழுது 100 டிகிரி முதல் 105 டிகிரி வரை நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி கொண்டு வருவதால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்கள் உடல்நிலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல்வேறு கட்சியினர் சார்பில் நீர் மோர் பந்தலை பொதுமக்களுக்காக திறந்து வருகின்றனர்.

 

இதனை அடுத்து வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அதிமுக கே.வி குப்பம் மேற்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா கே.வி.குப்பம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் கலந்துகொண்டு தண்ணீர் நீர் மோர் பந்தலினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ லோகநாதன், ஒன்றிய அவைத்தலைவர் தேவரன், துணைச் செயலாளர் குப்புசாமி முனியம்மா, இணை செயலாளர் தீபா, பொருளாளர் வேங்கையன்,

 

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் மகேந்திரன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சரவணன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மோகன், முன்னாள் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS