BREAKING NEWS

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக, அதிமுக யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம்

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக, அதிமுக யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் விட்டிருக்கும் அருள்மிகு கைலாசநாதர் கோவிலில்  கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக கட்சி சேர்ந்த நிர்வாகிகள் (மற்றும்) அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மகன் பிரதீப் இடையே யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம் நடைபெற்றது.

இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது கோயில் பூசாரி தீபத்தை ஏற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாச பட்டியில் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் இந்து அறநிலைத்துறை பாதிக்கப்பட்ட கோவிலாகும்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம் இது மட்டுமல்லாமல் முக்கிய பூஜை காலங்களில் பௌர்ணமி அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இக்கோவிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் குடும்பத்தார் இக்கோவிலை எடுத்து நடத்தி வருகின்றனர்.

இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தரைப்பகுதியில் இருந்து தார் சாலை ஆகியவர்களை ஓ பன்னீர்செல்வம் சொந்த பணத்திலிருந்து செலவு செய்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றத்தால் இந்து அறநிலை துறைக்கு பாதிக்கப்பட்ட அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தீபம் ஏற்றுவதாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் காலம் காலமாக தீபம் ஏற்றி வருவதாக கூறப்படுகிறது.

இன்று அது போன்று தீபம் ஏற்றுவதற்கு ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் பிரதீப் குடும்பத்துடன் தீபம் ஏற்றுவதற்கு வந்துள்ளார்.

 அப்போது அங்கு வந்திருந்த திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் திமுகவினர் நீங்கள் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்த ஓபிஎஸ் இன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது கைலாசநாதர் கோவில் பூசாரி தீபத்தை ஏற்றியதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் திமுகவினர் அப்பகுதியில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )