BREAKING NEWS

கொத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு.

கொத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கொண்டகிந்தன பள்ளி சாலை புதூர் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோயில் சிறிய மேடையில்பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வந்தது.

 

இந்நிலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் புதிதாக கோவில் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

இந்த விழாவில் விநாயகர் பூஜை மங்கள இசை திருப்பள்ளி எழுச்சி, தாய் வீட்டார் தட்டு வரிசை கொண்டு வருதல்.

 

அதை தொடர்ந்து தாயார் சங்கல்பம்,விஷேச ஹோமங்கல், விஸ்வரூப தரிசனம், மங்களார்த்தி தீபாராதனை, சந்தனம் சுவாமிக்கு உயிர் ஊட்டும் நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

யாககால கணபதி பூஜையுடன் மேல தாலங்களுடன் மந்திரங்கள் முழங்க
சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோபுரத்தின் மேலே உள்ள கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி பின்னர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.

 

இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற முழக்கத்துடன் அம்மனை வழிபட்டனர் நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

CATEGORIES
TAGS