BREAKING NEWS

கோமல் அன்பரசனை பின்பற்றி மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

கோமல் அன்பரசனை பின்பற்றி மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராகவும் முக்கியமான தலைமை கழக நிர்வாகியாகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12-ஆம் தேதி தாய் கழகமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

 

அதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.கவின் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அ.ம.மு.க.விலிருந்து கூண்டோடு விலகி, சென்னையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

 

அவர்களை எடப்பாடி கே.பழனிச்சாமி வரவேற்று,வாழ்த்தினார். அப்போது முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ. எஸ்.மணியன், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், கோமல் அன்பரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அமமுக மொத்தமாக காலி ஆகிவிட்டது.

 

CATEGORIES
TAGS