கோவில்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – இயேசு கிறித்துவின் பிறப்பை நாடகமாக அரங்கேற்றி அசத்திய பள்ளி சிறுவர் சிறுமிகள்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
உலகம் முழுவதும் டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயேசு கிருஸ்துவை வரவேற்கும் வகையில் உள்ள தேவாலயங்களில் வீடுகளிலும் குடில்கள் அமைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் வருகின்றார்.
இவ்விழாவை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள புனித வளனார் தொடக்கப் பள்ளியில் பயிலும் பள்ளி சிறுவர் சிறுமிகள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நாடகமாக அரங்கேற்யும், பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் இயேசு பிரான் வாழ்க்கையை தத்துரூபமாக எடுத்துக் கூறி அசத்தினர்.
இதனை பெற்றோர்கள் ஆசிரியர்கள் கைதட்டி பள்ளி சிறுமிகளை உற்சாக படுத்தினர் இந் நிகழ்வில் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல உதவி பங்கு தந்தை மகேஷ் , பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து.