கோவில்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத கொடை விழா முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி அன்று நாள்கால் நாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று பால்குடம் ஊர்வலம் அக்கினி சட்டி ஊர்வலமும் சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் சிறப்பு தீபாரணை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடினை கோயில் பூசாரி ஜோதி, கோவில் தலைவி பாக்கியலட்சுமி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
CATEGORIES தூத்துக்குடி