BREAKING NEWS

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தண்ணீர் வசதி பஸ் போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி மாணவ மாணவிகள் கல்லூரி வாயில் முன்பு தரையில் அமர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தண்ணீர் வசதி பஸ் போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி மாணவ மாணவிகள் கல்லூரி வாயில் முன்பு தரையில் அமர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி கடந்த 2016 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த கல்லூரியில் பி ஏ பி எஸ் சி பி காம் எம். ஏ எம் எஸ் சி எம் காம் உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

 

கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு போர்வெல்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் போர்வெல் மோட்டார்கள் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 10 தினங்களாக தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது இதையடுத்து கல்லூரி மாணவ மாணவிகள் மாற்று ஏற்பாடு செய்து தர வலியுறுத்தி கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

 

பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்வெல் மோட்டார்களை சரி செய்த பின்னர்தான் தண்ணீர் விநியோகம் சீராகும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனராம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் விநியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வரை தண்ணீர் வசதி இல்லாமல் எப்படி கல்லூரி செயல்பட முடியும். பெண்கள் கழிப்பறையில் கூட தண்ணீர் வசதி இல்லை.

 

 

எனவே தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வசூலிக்கப்படும் கல்விக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும். கோவில்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரிக்கு அரசு பேருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கல்லூரி முதல்வர் நிர்மலா மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவ மாணவியிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேத்தி தருவோம் என்று உறுதி அளித்த பின் போராட்டத்தை கைவிட்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

CATEGORIES
TAGS