BREAKING NEWS

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.

தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி எட்டையாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கருப்பசாமி விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் நடத்துனர் மற்றும் 80 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படர்ந்தபுளி அருகே சென்று கொண்டிருந்த போது,

 

 

 

காட்டுபகுதியில் திடீரென குறுக்கே வந்த மயில் அரசு பேருந்து முன் பக்க கண்ணாடி மீது மோதியதில் முன்பக்க கண்ணாடி உடைந்து சுக்கு நூறானது இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் சுதாரித்து கொண்டு பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.ஓட்டுநர் மற்றும் பயணிகள் கீழே இறங்கி வந்து பார்த்த போது பேருந்து கண்ணாடியின் மீது மயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே மயில் துடிதுடித்து உயிரிழந்தது.

 

 

இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட்ட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்டு பேருந்தில் இருந்த பயணிகள் அதே பேருந்தில் பத்திரமாக விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )