BREAKING NEWS

கோவில்பட்டி அருகே காரில் கடத்த முயன்ற 1 டன் புகையிலை கார் பறிமுதல் – ஒருவர் கைது.

கோவில்பட்டி அருகே காரில் கடத்த முயன்ற 1 டன் புகையிலை கார் பறிமுதல் – ஒருவர் கைது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கயத்தாறு டோல் கேட் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

 

 

அப்போது அவ்வழியாக சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் தடை செய்யப்பட்ட 1 டன் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

 

 

இதனையடுத்து ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொள்கையில் பெங்களூரில் இருந்து தென்காசி மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதிக்கு கொண்டு செல்ல இருப்பது தெரியவந்தது.

 

 

இதனை அடுத்து தென்காசி மாவட்டம் வி .கே புதூர் பகுதியை சேர்ந்த சுடலை காந்தியை கைது செய்தும் கார் மட்டும் புகையிலை பொருட்களையும் கயத்தார் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS