கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்க்கு மின் வசதி சீராக கிடைத்திடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்கு சரிவர மின் வசதி கிடைக்காமல் தவித்த மக்களின் நீண்ட நாள்குறைகளை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் மூலம் புதிய இரண்டு டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தனர்.
விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சசிகுமார்,நகர மன்ற உறுப்பினர் கவியரசன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன் பழனி முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி