BREAKING NEWS

கோவில்பட்டி அருகே பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய பிரிட்ஜ் – விட்டில் யாரும் இல்லாததால் உயிர் தேசம் தவிர்ப்பு.

கோவில்பட்டி அருகே பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய பிரிட்ஜ் – விட்டில் யாரும் இல்லாததால் உயிர் தேசம் தவிர்ப்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள அயன் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர், கிருஷ்ணவேணி தம்பதியினர் அப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பாலா, என்ற மகனும் பூஜா, என்ற மகளும் உள்ளனர்.

 

இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர் ராமர்,கிருஷ்ணவேணி இருவரும் அப்பகுதியில் உள்ள அவர்களது சொந்த விவசாய நிலத்திற்கு சென்று விவசாய பணியை மேற்கொண்டு வந்துள்ளனர்.

 

 

அவளது மகனும் மகளும் கல்லூரிக்குச் சென்றுவிட்டனர் இந்நிலையில் பிற்பகலில் அவர்கள் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

இதனையெடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கு சென்று பார்த்தபோது தீப்பற்றி எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்தது உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

 

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். அப்போது வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி உள்ளது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் புத்தகங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

 

உயர் மின்னழுத்தம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS