BREAKING NEWS

கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:

கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விருசம்பட்டியை உள்ள வி வேடப்பட்டி கிராமத்தில் சுமார் 42 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று விருதுநகரை சார்ந்த சில மர்ம நபர்கள் எந்தவிதமான அரசின் அனுமதி இன்றி கனரக இயந்திரங்களைக் கொண்டும் நூற்றுக்கணக்கான ராட்சத வாகனங்களை கொண்டும் மணல்களை கடத்தி வருகின்றார்கள்.

இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மணல் அள்ளும் கும்பல் மேற்படி மணல்களை திருடி பக்கத்து ஊரான மார்த்தாண்டம்பட்டி என்றும் இடத்தில் மழை போல குவியல்களாக குவித்து வைத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து இந்த சட்டவிரோதமாக மணல் அள்ள கூடிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து தனியார் நிலத்தில் குவிக்கப்பட்டுள்ள மணல்களை மீட்டு அரசு கையகப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS