BREAKING NEWS

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த நிகழ்ச்சியானது இன்று கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான மலர் விழி, நாஸ்காம் அமைப்பின் கல்வி மற்றும் அரசு தொடர்புகள் துறையின் தலைவர் உதயசங்கர் ஆகியோர் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பத்திரங்களை மாற்றி கொண்டனர். இதனை தொடர்த்து மாணவர்கள் மத்தியில் பேசிய ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர் விழி பேசுகையில்..
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக
இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப துறையில் தங்களது திறன்களை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்றார். இதற்காக மாணவர்களுக்கு நாஸ்காம் அமைப்பு மாணவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா, தலைமை செயல் அதிகாரி முனைவர் சுந்தரராமன், மற்றும் கல்லூரியின் முதல்வர்கள், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS