BREAKING NEWS

கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

 

மயிலாடுதுறை மாவட்டம் தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பணம் செலுத்தி கைத்தறி புடவையை பெற்றுக்கொண்டு தொடங்கி வைத்தார்.

 

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது.

 

மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணையின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி விற்பனை திங்கட்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

 

தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான “கோ ஆப்டெக்ஸ்” கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்தியா முழுவதும் உள்ள “கோ ஆப்டெக்ஸ்” விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது.

 

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் “கோ-ஆப்டெக்ஸ்” சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மயிலாடுதுறை மாவட்ட மக்கள் அனைவரும் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி பொருட்களை வாங்கி கைத்தறி நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல் பல்வேறு புதுமையான கைத்தறி புடவைகள் வைக்கப்பட்டுள்ளது. 

 

 

கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

 

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூபாய் 65 இலட்சம் விற்பனை ஆனது. இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.1400.00 இலட்சம் விற்பனை குறியீடாகவும், அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.100.00 இலட்சமும் சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.50.00 இலட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

 

தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30% வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே, அனைத்து துறை ஊழியர்களுக்கும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸில் இன்றைய மக்களுக்கு ஏற்ற வகையில் புடவைகள் தரமாக வைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் வருங்காலத்தில் மிகப் பெரிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்படும். இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் தா.ரமணி.கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் எஸ்.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )