BREAKING NEWS

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் (டிரைவர் 37) இன்று மாலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்து மக்களை மகா சிவராத்திரியை முன்னிட்டு வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்ச பூதஸ்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவிலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சங்கரன்கோவில் நகரப் பகுதியில் போது விபத்து ஏற்பட்டது இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேனில் உள்ள பொதுமக்களை இறக்கிவிட்டு வேன் டிரைவர் முருகனுடன் சங்கரன்கோவில் டவுன் ஸ்டேசனுக்கு வேனை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

உடனடியாக அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு சென்றனர் அப்போது போலீசாரிடம் டிரைவர் முருகனை எங்கே என கேட்டதாகவும் அப்போது வேன் டிரைவர் முருகன் இறந்த நிலையில் இருந்தாக கூறப்படுகிறது
இது பற்றி தகவல் கிடைத்ததும் டிரைவர் முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையம் முன்பு நூற்றுக்கு மேற்பட்டோர் குவிந்தனர்.

பின்னர் அங்கிருந்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் தொடர்ந்து பதட்டம் நிலவி வந்தது இதனையடுத்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் போராட்டம் நடத்தி வருவபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாலை மறியல் செய்து வருகின்றனர் இதனால் போக்குவரத்து மாற்று பாதையில் விடப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர் இதனைத் தொடர்ந்து இறந்த ஓட்டுநர் முருகனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பின்னரே உறவினர்கள் காவல்துறை மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ததை கைவிட்டு களைந்து சென்றனர்
மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படும் என தெரிய வருகிறது

Share this…

CATEGORIES
TAGS