சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே காட்டுப்பகுதியில் சூதாட்டம் ஆடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ,4,50,000 மற்றும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள உடப்பன்குளம் காட்டுப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கரன்கோவில் டி.எஸ்.பி.சுதிர் தலைமையில் தனிப்படை போலீசார் சாதாரண உடையில் காட்டுப்பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இச்சபம் தொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சொக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துபாண்டி, சங்கரன்கோவிலை சேர்ந்த கலைச்செல்வன், ஆனந்தன், பிச்சை, ராமசாமி பாண்டியன், தேவர்குளத்தைச் சேர்ந்த மாரி ராசு, சிங்கிலிபட்டியைச் சேர்ந்த சுப்பையா பாண்டி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.சூதாட்டத்தில் வைத்து விளையாடிய ரூ4,50,000 மற்றும் 6 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.