சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் காலை சரியாக 5.05 மணிக்கு நடைபெற்றது

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் திருவெம்பாவை திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்ச்சையாக நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது முன்னதாக கோபூஜை நடைபெற்றது பின்னர் ஸ்ரீ நடராஜ பெருமான் ஆனந்த திருத்தாண்டவ நடனமாடினார் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்சங்கரநாராயண சாமி திருக்கோவில்சங்கரன்கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்முக்கிய செய்திகள்