சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்கு. துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டுச் சான்று

தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்குகளில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை போலீசாரின் சிறந்த பணிக்காக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள் கடந்த 12.06.2025 அன்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேற்படி காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரை இன்று (16.06.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
CATEGORIES தூத்துக்குடி