சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உன் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 5லட்சம் மதிப்பிலான சுத்தி எடுக்கப்பட்ட மின்விளிவாக குடிநீர் வாட்டர் டேங்க் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஸ்ரீவர்ஷினி தலைமையில் பல் மருத்துவர் கணேஷ் பாபு முன்னிலை வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை திறந்து வைத்து குடிநீரை குடித்தார்.
பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர்களிடம், செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை துணை செயலாளர் நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியப்பன்,

கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ்,மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, வர்த்தக அணி பிரிவு காமராஜ், மாரியப்பன், செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி,ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,

நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மேல ஈரால் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
