BREAKING NEWS

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாவட்ட சைபர் வலைதள பக்கத்தை ஆய்வு செய்த போது மேற்படி Twitter வலைதளத்தில் M R Radha ® என்ற பெயரில் @Itz_katti என்ற user id யை உபயோகப்படுத்தும் நபர் கடந்த 04.07.2023-ம் தேதி மேண்மைமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை விமர்சித்தும்,

 

அவரது புகைப்படத்தை பகிர்ந்து மதரீதியாக விமர்சித்தும் அதன் மூலம் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலும் இரு மதத்தினரிடையே பகைமை உணர்ச்சியும் வெறுப்பையும் தூண்டும் வகையிலும் பொதுமக்களை ஆத்திரமூட்டி அரசுக்கும், நீதித்துறைக்கும் எதிராக செயல்பட வைத்து பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

 

இதன் மூலமாக சட்ட ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தும் விதமாக Twitter ல் மேற்படி வலைதள கணக்கை பயன்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் கட்டிமுத்து என்பவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

எனவே, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் அவதூறு செய்தி பரப்புவோர் மீது காவல் துறை பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS