BREAKING NEWS

சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி.

சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது.

 

இதில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா கலந்து கொண்டு சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு திருந்தி வாழும் நபர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினர். 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஒரு வருடத்தில் மது விற்பனை தொடர்பாக 3,188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,320 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இதேபோல் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்த 388 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 330 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 331 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஏற்கனவே ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மயிலாடுதுறையில் மறுவாழ்வு சீரமைப்பு முகாம் நடைபெற்றது.

 

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கலந்துகொண்டு இரண்டு பேருக்கு தையல் இயந்திரங்கள், மற்றும் எட்டு பேருக்கு ஆடுகள் ஆகியவற்றை வழங்கினார். முன்னதாக பங்கேற்ற அனைவரும் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

 

இதில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ், மதுவிலக்கு டிஎஸ்பி சுகுமார், மதுவிலக்கு ஆய்வாளர் செல்வி, மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS