சாலை ஓரத்தில், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் வகையில் கிணறு. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வழியாக செல்லும் பயணிகள் கோரிக்கை

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி ஸ்ரீராமாபுரம் தேசிய நெடுஞ்சாலை முதல் காவாகாரன் கொல்லை வரை செல்லும் சாலை ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாத நிலையில் வளைவில் ஒரு கிணறு உள்ளது.
சாலையில் மின் விளக்கு (தெருவிளக்கு ) கூட இல்லாத அச்சாலையில் பாதுகாப்பு இல்லாத நிலையில் கைப்பிடி சுவரோ தடுப்பு சுவரோ இல்லாத நிலையில் உள்ள விவசாய கிணறு உள்ளது.இரவில் மின் விளக்கு இல்லாமல் வாகனங்கள் தடுமாறும் நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் கண்டுக் கொள்ளாமல் இருப்பது விசித்திரமாக உள்ளது.
இது போல் தான் “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ” கார் கிணற்றுக்குள் விழுந்து விபரீதம் நடந்துள்ளது எல்லோரும் அறிந்ததே.இந்த ரோட்டில் பெரியவர்கள் மற்றும் பள்ளி செல்லும் பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் பயணிக்கின்ற அவ்வழியாக பயணிக்கும் போது சிறிது பயத்துடனே பயணிக்கிறன . எனவே சிறு விபத்து கூட நடந்துவிட கூடாது என பொதுமக்கள் கருதுகின்றனர்.
அதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படும் முன் அவ்விடத்தை பார்வையிட்டு உடனடியாக தடுப்பு சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.