BREAKING NEWS

சாலை விபத்தில் உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மாணவ, மாணவிகள்.

சாலை விபத்தில் உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மாணவ, மாணவிகள்.

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி திருச்சி துறையூர் புறவழிச்சாலையில் மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

மண்ணச்சநல்லூர் பண்டாரிநாதன் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் 44 வயதான பாலகிருஷ்ணன். இவர் திருப்பைஞ்சீலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 28 ந்தேதி இரவு தனது மோட்டார் பைக்கில் திருச்சி துறையூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது உளுந்தங்குடி புள்ளம்பாடி வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக மோட்டாரில் பைக்கிலி ருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

 

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்நிலையில் மண்ணச்சநல்லூரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்க்காக அவரது பூத உடல் வைக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், என்பதற்கு உதாரணமாக தான் மறைந்த பின்பும் தனது மாணவர்களின் பாசத்தை எடுத்துச் செல்கிறார்.

 

உடற்கல்வி ஆசிரியராக இருந்து பல மாநிலங்களுக்குச் சென்று தனது மாணவர்களுக்கு பல பதக்கங்களையும் பெருமையும் தந்து இந்த மண்ணை விட்டு செல்லும் சிறந்த ஆசிரியருக்கு மாணவ,மாணவிகள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

CATEGORIES
TAGS