BREAKING NEWS

சின்ன தாமல் செருவு ஊராட்சியில் தொடரும் முரம்பு மண் கடத்தல்: துணை போகும் கிராம நிர்வாக அலுவலர்

சின்ன தாமல் செருவு ஊராட்சியில் தொடரும் முரம்பு மண் கடத்தல்: துணை போகும் கிராம நிர்வாக அலுவலர்

பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு ஊராட்சியில் தொடரும் முரம்பு மண் கடத்தல்: துணை போகும் கிராம நிர்வாக அலுவலர் சிவா மீது கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, சின்னதாமல் செருவு ஊராட்சியில் .கிராம நிர்வாக அலுவலராக சிவா என்று பதவி ஏற்றாரோ அன்றிலிருந்து இன்றுவரை முரம்பு மண் கடத்தல் மற்றும் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஓங்குப்பம் ரோட்டைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுவதாகவும், இதை கண்டுகொள்ளாமல் இருக்க கிராம நிர்வாக அலுவலர் சிவாவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகை சென்று சேர்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் முரம்பு மண் கடத்தலும் படுஜோராக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .

இதையும் கண்டுகொள்ளாமல் இருக்க கிராம நிர்வாக அலுவலர் சிவாவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகை சென்று சேர்வதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுகிறது

.இதுகுறித்து பல தினசரி நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியும் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தத்தை தருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது .

எனவே இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமியும், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதியும், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமியும் நேரில் கள ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது நடப்பது உண்மை என தெரியவரும் பட்சத்தில் மேற்கண்ட தவறுகளுக்கு துணை போகும் சின்னதாமல் செருவு கிராம நிர்வாக அலுவலர் சிவா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது .

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS