BREAKING NEWS

சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் பாதுகாவலர்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை உயிர் பயத்தில் எங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்குமா என்று மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு நள்ளிரவு தர்ணா.

சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் பாதுகாவலர்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை உயிர் பயத்தில் எங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்குமா என்று மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு நள்ளிரவு தர்ணா.

வேலூர் மாவட்டம்:

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கடந்த 25 ஆம் தேதி கட்டிட சுவரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளம் சிறார் உட்பட 6 பேர் இன்று இல்லத்தில் இருந்து தப்பியோட்டம் வேலூரில் பரபரப்பு.

 

 

வேலூர் ஆற்காடு சாலை காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயது உடைய இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இளம் சிறார் ஒருவரை சென்னையில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் மார்ச் 25ஆம் தேதி முயற்சி செய்தபோது… பாதுகாப்பு இல்ல கட்டிட சுவர் மீது ஏறி கீழே இறங்காமல் சுமார் மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக அட்டகாசம் செய்தார்.பின்னர் வேலூர் இளஞ்சிரார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரி பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் வந்து இளஞ்சிறாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கீழே இறங்கினார்.

 

 

இந்த நிலையில் மார்ச் 27 ஆம் தேதியான இன்று சுவரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளம் சிறார் மற்றும் அவரது கூட்டாளிகள் என 6 பேர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

 

 

தப்பி ஓடிய போது பாதுகாப்பு இல்ல ஊழியர்கள் மூன்று பேரை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வேலூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் சுமார் 50க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

 

அதன் தொடர்ச்சியாக வேலூர் கோட்டாட்சியர் கவிதா தலைமையிலான வருவாய் துறையினரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் விசாரணை நடத்தினர். அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து இளம் சிறார்கள் ஆறு பேர் தப்பி ஓடிய சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தப்பி சென்றவர்களிடம் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டி நள்ளிரவில் சிறார் சீர்திருத்த பள்ளியின் பாதுகாப்பாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு மனு கொடுக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

இதில் அவர்கள் கூறுகையில் நாங்கள் தன்மானத்தை இழந்து பணி செய்கிறோம் எங்களை அவர்கள் மிகவும் சிறுமைப்படுத்துகிறார்கள் எங்கள் மீது தண்ணீர் ஊற்றியும் எங்களை தரக்குறைவாக பேசியும் எங்களில் ஒருவர் குமரவேல் சிறார்கள் மூலமாக கத்தி எடுத்து எங்களை தாக்கினார்கள் அதன் மூலமாக நான் காயமடைந்து அரசு அடுக்கும்போறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொழுது,

 

 

எனக்கு என்ன நடந்தது என்பதை குறித்து எந்தத் துறை ரீதியாகவும் என்னை தொடர்பு கொண்டு கேட்கவில்லை எங்களுக்கு என்ன நடந்தாலும் பணி நிரந்தரம் கிடையாது அதாவது உயிர் இருந்தாலும் எங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடையாது என்பதை வலியுறுத்தியும்,

 

எங்களுக்கு பாதுகாப்பு இன்மை வலியுறுத்தியும் இன்று நள்ளிரவில் ஒரு மணி அளவில் மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டோம் மனு கொடுக்க முயன்றோம் இருப்பினும் மாவட்ட ஆட்சியர் காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுங்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் நாங்கள் தர்ணாவை கைவிட்டோம்,

 

CATEGORIES
TAGS