சிவகங்கை நகராட்சியில் சமத்துவ சுகாதார பொங்கல் விழா.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை நகராட்சியில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடி மகிழ சமத்துவ சுகாதார பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு திருமதி பாண்டீஸ்வரி அவர்களும் நகர மன்ற துணைத் தலைவர் மற்றும் அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அலுவலர் ஆய்வாளர் குடிநீர் கண்காணிப்பாளர் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
CATEGORIES சிவகங்கை
TAGS சிஎம்.துரைஆனந்த்சிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பொங்கல் திருநாள் விழாமுக்கிய செய்திகள்