சிவகங்கை நகராட்சி வார்டுகளில் ஹைமாஸ் லைட் அமைக்கும் பணி அடிக்கல்நாட்டு விழா.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி 27,18,21 வார்டுகளில் சிவகங்கை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான ஹைமாஸ் லைட் அமைக்கும் பணிக்கான அடிக்கல்நாட்டு விழா நமக்குநாமே திட்டத்தின் மூலம் தனது சொந்த பணத்தில் இருந்து நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள்,
மற்றும் CAPTAIN R.V.சரவணன என இருவரும் இணைந்து இரண்டு லைட்டிற்கும் ரூபாய்-2,82,000/- கொடுத்து இரண்டு இடங்ளை தேர்வு செய்து ஆரோக்கியா பால் கடை சந்திப்பு மற்றும் 108 ஆம்புலன்ஸ் அதிகமாக செல்லும் இளையான்குடி ரோடு திருப்பமான அருண்கடை சந்திப்பு என இரண்டு இடங்களை தேர்வு செய்து அமைய உள்ளது.
இதற்கான அடிக்கல்நாட்டு விழா இளையான்குடி செல்லும் சாலை இந்திராநகர் பகுதியில் நடைபெற்றது. சிஎம்.துரைஆனந்த் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இதே போல் நகராட்சி சார்பாக நேருபஜார் பள்ளிவாசல் அருகே மற்றும் மதுரை ரோடு அலங்கார அன்னை சர்ச் முன்புறம் என சிவகங்கையின் முக்கிய பகுதிகளில் மொத்தம் ஐந்து விளக்குகள் அமைப்பதற்கான பணிகள் துவங்கபட்டது.
இவ்விழாவில் நகராட்சி சார்பாக பொறியாளர் பாண்டிஸ்வரி, நிர்வாக மேலாளர் மற்றும் கேப்டன்.RV.சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆயூப்கான், ராமதாஸ்,
மதியழகன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சதிஸ்குமார்,மற்றும் RD.சேகர்,சேது,ராஜா சார்புதின்,மகேந்திரன்,
கார்த்திகேயன்,நவனித கிருஷ்னன்,அஜ்ம்ல்கான் மற்றும் நகர் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.