BREAKING NEWS

சிவன் வடிவில் உள்ள ரஜினியின் கோவிலில் மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை

சிவன் வடிவில் உள்ள ரஜினியின்  கோவிலில் மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை

திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் சிவன் வடிவில் உள்ள ரஜினியின் முழு உருவப்படத்திற்கு மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை, சிறப்பு அபிஷேகம் – ரஜினியை குல தெய்வமாக வழிபடும் ரசிகர் தொடர் வழிபாடு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வரும் கார்த்திக் (45) என்பவர், கடந்த பல வருடங்களாக ரஜினியை கடவுளாகவும், தனது குருவாகவும் எண்ணி, வாடகை வீட்டில் ஒரு முழு அறையை ரஜினியின் கோவிலுக்காக ஒதுக்கப்பட்டு., அந்த அறை முழுவதும் ரஜினி நடித்த படங்களுடைய முழு உருவ படங்களை ஒட்டி உள்ளார்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, ரஜினிக்கு 240 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் செய்யப்பட்ட ரஜினியின் முழு உருவ கற்சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தியதுடன்,

இன்று மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, அவரது முழு சிவ வேடத்தில் உள்ள முழுஉருவபடத்திற்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தி வழிபட்டதுடன் இரவு முழுவதும் தொடர் வழிபாடு நடத்தி மூன்று கால பூஜைகள் நடத்தி உள்ளதாகவும், தனக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் கடவுளாக ரஜினி தோன்றுவதாகவும்., அவரை குலதெய்வமாக வழிபட்டு சிவராத்திரி தினத்தை முன்னிட்டு , அவரை வழிபட்டு வருவதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் அனைவரும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தங்களது குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவது போல் கார்த்திக் என்பவர் ரஜினியை குலதெய்வமாக வழிபட்டு வரும் சம்பவம் வினோதமாக கூறப்படுகிறது.

Share this…

CATEGORIES
TAGS