BREAKING NEWS

சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் இராணுவ வீரர்கள் மரியாதை.

சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் இராணுவ வீரர்கள் மரியாதை.

செங்கோட்டை அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்:

கடந்த 2020 ஆம் ஆண்டு மே 4-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவத்தில் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப்.வீரர் சந்திரசேகரும் ஒருவர்.

இந்நிலையில் வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம்குமார் தலைமையில் கெளரவத்தலைவர் மணி மற்றும் செயலாளர் முருகன், துணைச் செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அவரது மனைவி ஜெனிபர் கிறிஸ்டி மற்றும் தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கத்தை சேர்ந்த ஆறுமுகம், மாரிராஜ், சக்திகுமார், விஜய், கருப்பசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS