BREAKING NEWS

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

 

இன்று பள்ளிக்கு விடுமுறை தினம் என்பதாலும் முறையான பாதுகாப்பு இல்லாத தால் அடையாளம் தெரியாத மாணவர்கள் வெளிப்பகுதியில் இருந்து மின்சார ஒயரை திருடி வந்து பள்ளி அருகில்  தீ வைத்து எரித்து உருகி அதனை விலைக்கு விற்பதற்கு பூட்டி வைக்கப்பட்டுள்ள..

 

 

பள்ளி மாணவர்களுக்கு தேவையான காலனி கம்ப்யூட்டர் டேபிள் சேர் பழைய புத்தகங்கள் போன்ற உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் அருகாமையில் எரிக்கப்பட்டதால் திடீரென அரை உட்பகுதியில் தீ பற்றி எரிந்ததாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

 

இதனால் பள்ளி அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அரசு பள்ளிக்கு சொந்தமான ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

 

 

எனவே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளிக்கு முறையான பாதுகாப்பு ஏற்படுத்தி விடுமுறை தினங்களில் பள்ளி கூடுதல் காவலர்களை பணி அமர்த்த வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )