BREAKING NEWS

செங்கல்பட்டில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.

செங்கல்பட்டில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.

 

 செங்கல்பட்டில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஆர். ஜி மாடர்ன் கம்யூனிட்டி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

இந்த விழிப்புணர்வு பேரணியில் எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தபடி பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

 

 

பேரணியை நல்லதோர் லட்சியம் அறக்கட்டளையின் நிறுவனரும் மற்றும் மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவருமான தமிழரசன் மற்றும் செங்கை நகர காவல் துறை உதவி ஆய்வாளர் பற்குணம் ஆகியோர் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தனர்.

 

 

இந் நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் கௌதமன் கல்லூரி மேலாளர் நிவேதா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )