BREAKING NEWS

செங்கோட்டை அருகே வடகரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

செங்கோட்டை அருகே வடகரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வடகரை முஸ்லீம் துவக்கப்பள்ளியில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதிஉதவியுடன்,

 

நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, விசுவநாதபுரம் அரசமரம் கண் குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோருக்கான சேவை அமைப்பின் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்தான விழிப்புணா்வு முகாம் நடந்தது.  

 

முகாமிற்கு நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் காயத்ரி தலைமை தாங்கினார். முகாம் முதன்மை மேலாளா் மாணிக்கம், ஒருங்கிணைப்பாளர் சாகுல்ஹமீது மற்றும் மருத்துவ குழுவினா் முன்னிலை வகித்தனர்.

 

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், மாநில மாணவரணி துணை செயலாளர் எம்.ஏ.எம் ஷெரிப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். அரசமரம் கண்குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோருக்கான சேவை அமைப்பின் நிறுவனா் மன்சூர் வரவேற்றார். 

 

இதனை தொடா்ந்து முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. கண் புரை உள்ளவர்களுக்கு இலவசமாக விழிலென்ஸ் பொருத்தப்பட்டு உணவு தங்குமிடம் மற்றும் சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டது.

 

மேலும் குறைந்த விலையில் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு தேர்வானவர்கள் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

 

முகாமில் வடகரை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )