BREAKING NEWS

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் நாட்டிய கல்லானது யாராலும் கண்டு கொள்ளப்படாமல் சாதாரண நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் 2013ம் ஆண்டு சட்டசபையில் வாஞ்சிக்கு மணிமண்டபம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

 

 

இந்நிலையில் காமராஜரால் அடிக்கல் நாட்டிய கல் சாலையில் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. பின்னர் அடிக்கல்லானது செங்கோட்டை நகராட்சியில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது கல்வெட்டு வாஞ்சிநாதன் மணிபண்டபத்தில் நிறுவ வேண்டும் என காமராஜர் பேத்தி கமலிகா காமராஜர் கோரிக்கையை வைத்தார்.

இதனைதொடர்ந்து இன்று வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டானது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது.

 

முன்னதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.

 

 

இந்த நிகழ்ச்சியில் கங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலட்சுமி, மாநில செயலாளா் ஆலங்குளம் செல்வராஜ், மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் அப்துல்காதர்,

 

மாவட்ட துணைத்தலைவா்கள் ராம்மோகன், மேலநீலிதநல்லூர் மனோகா், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் ரெசவுமுகம்மது, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவா் சுரேஷ், துணைத்தலைவா் பால்சாமி, முன்னாள் பஞ்சாயத்து யூனியன் தலைவா் சட்டநாதன், செங்கோட்டை வட்டார தலைவா் கார்வின் மற்றும் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )