செந்துறை அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் ஆர்.எஸ்.மாத்தூர் ரயில் நிலையத்திற்கும் பெரியாக்குறிச்சி நல்லான்காலனி பகுதியின் இடைப்பட்ட ரயில்வே பாதையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் நபர் நாகர்கோவிலில் இருந்து மும்பை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.
இவர் யார் எந்த ஊர் என எந்த விவரமும் தெரியாததால் அணிந்திருந்த உடைகள் ஊதா கலர் அரைக்கை சட்டை கருப்பு வெள்ளை பாசி கலர் கலந்த கட்டம் போட்ட கையிலி அணிந்திருந்தாக ரயில்வே போலீசாரியின் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் இவரை பற்றி முழு விவரம் விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES அரியலூர்
TAGS அரியலூர் மாவட்டம்ஆண் நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்புஆர்.எஸ்.மாத்தூர் ரயில் நிலையம்குற்றம்செந்துறைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்விருத்தாச்சலம் ரயில்வே போலீசார்