செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில்.

அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் பேருந்து நிலையம் முன்பு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல், ஜெயங்கொண்டத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் அரசு பேருந்தை 23 பயணிகளுடன் ஓட்டுநர் பழனிவேல் என்பவர் ஓட்டி வந்தார்.
இதேபோன்று திட்டக்குடியில் இருந்து செந்துறை நோக்கி 11 பயணிகளுடன் வந்த அரசு நகர பேருந்தை பார்த்தசாரதி என்பவரும் ஓட்டி வந்த நிலையில் நல்லநாயகபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு தொடக்கப்பள்ளி முன்பு மோதல், மேலும், நெடுஞ்சாலையின் சாலை வளைவின் ஓரத்தில் கட்டிட வேலைக்காக செங்கல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்து வருவோரும் இங்கிருந்து போவோரும் யார் வருகிறார்கள் என்பது தெரியாது அப்படி இருக்கும் சூழலில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர்களின் எதிர்பாராத விதமாக இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முன் பக்க கண்ணாடிகள் முற்றிலும் சேதமடைந்தது.
தகவலறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 பேர் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதில் லேசான காயமடைந்த கடலூர் மாவட்டம் திருவட்டதுறை கிராமம் லெஷ்மி முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமம் நாரயணன் மற்றும் சிறுகடம்பூர் கிராமம் ராஜமணி ஆகியோர்கள் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பேருந்து விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து மோதிக்கொண்டதை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வினோத்குமார்.