BREAKING NEWS

சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார்.

சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார்.

நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக,நீட் விலக்கு மசோதா, துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.

 

நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நீட் விலக்கு மசோதா, துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாக்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், நாளை கலைஞர் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக முதல்வர் ஆளுநர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )