செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 77 வது சுதந்திர தின விழா

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் செம்பனார்கோயிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா எம்.முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல் மாலிக் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோயில் காவல் நிலைய வளாகத்தில் காவல் துறை உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் தேசிய கொடியை ஏற்றினார். செம்பனார்கோயில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதனும், பரசலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகமும், தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
முன்னதாக செம்பனார்கோயிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரமா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சுமை தூக்கும் தொழிலாளர் மேஸ்திரி பழனிவேல் தேசிய கொடியை ஏற்றினார்.