செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
செம்பனார்கோவில் ஊராட்சியில் கடந்த 1964 ஆம் ஆண்டு கக்கன் அமைச்சராக இருக்கும்பொழுது திறக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டிடத்தில் கால்நடை மருத்துவமனை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார்.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
முன்னதாக அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. விழாவில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன்,
ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல்மாலிக், அமுர்த.விஜயகுமார், கால்நடை மருத்துவர்கள் அன்பரசன், மோனிஷா புகழ், பிராபவதி, உதவியாளர் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.