சேரன்மகாதேவியில் 74 அடி நீளம் உள்ள தேசியக்கொடி கோலம்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 74 அடி நீளம் 24 அடி அகலத்திற்கு 250 கிலோ அரிசி 250 கிலோ உப்பு 240 கிலோ மண் ஆகியவற்றைக் கொண்டு 74 அடி நீளத்திற்கும் தேசியக்கொடி வரையப்பட்டு,
அதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை நிறுவனம் நேரடியாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி உள்ளது இதற்கான பணிகளை பள்ளி தலைமை ஆசிரியர் மருதப்ப பாண்டி ஆசிரியை பொன் ரேகா ஆசிரியர்கள் குத்தாலம் அழகு துரை ஆகியோர் உட்பட 25 மாணவர்கள் ஒன்றிணைந்து சாதனைக்கான தேசியக் கொடியை வரைந்தனர்.
இதனை கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டு சென்றனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS 74 ஆவது குடியரசு தினம்சேரன்மகாதேவி ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்முக்கிய செய்திகள்