சேர்க்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பட்டாவுக்காக ரூ. 70 ஆயிரம் கேட்ட விஏஓவை திட்டி எச்சரித்து அனுப்பிய காட்பாடி வட்டாட்சியர்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் இளங்கோ. இவர் ஏற்கனவே காட்பாடி காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி விட்டுச் சென்றவர். அப்போது காலியாக உள்ள புறம்போக்கு இடங்களை சில பல சமூக விரோதிகளுக்கு விற்பனை செய்து காசாக்கி அதை பையில் போட்டுக் கொண்டு சென்றவர் தான் இந்த கடமை வீரன் கந்தசாமி இளங்கோ ஆவார்.
இந்நிலையில் தற்போது சேர்க்காட்டில் கிராம நிர்வாக அலுவலராக இருந்து கொண்டு தனது பங்குக்கு பணத்தை வாரி குவித்து வருகிறார்.
இவரது பாக்கெட்டும் கணிசமாக நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு கதையைத்தான் நாம் சற்று சுருக்கமாக பார்க்க போகிறோம்.
அதாவது அண்மையில் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் இவரை நாடி ஒரு இடத்துக்கு பட்டா கேட்டுள்ளார். அதற்கு ரூபாய் 70 ஆயிரம் வரை கையூட்டு வேண்டும் என்று இளங்கோ என்ற அரிச்சந்திரன் வீட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ நா கூசாமல் மனசாட்சியே இல்லாமல் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன அந்த ரியல் எஸ்டேட் அதிபர் நேரடியாக காட்பாடிக்கு வந்து அங்குள்ள வட்டாட்சியர் ஜெகதீஸ்வரனை சந்தித்து இளங்கோ தன்னிடம் கையூட்டு கேட்டது தொடர்பான கதையை விரிவாக, விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் சேர்க்காடு விஏஓ இளங்கோவனை அழைத்து எவ்வளவு எச்சரிக்க முடியுமோ அவ்வளவு எச்சரித்து அனுப்பியுள்ளார்.
அதற்குப் பிறகும் பண மோகம் தீராத விஏஓ இளங்கோ அந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூபாய் 10,000 பெற்றுக் கொண்டு அந்த இடத்துக்கு பட்டா வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் தாசில்தார் சொன்னால் என்ன, கடவுளே சொன்னால் என்ன பணமில்லாமல் அணுவும் அசையாது என்னிடம் என்பதை மீண்டும் ஒருமுறை இதன் மூலமாக நிரூபித்துள்ளார்.
இந்த கடமை வீரன் விஏஓ இளங்கோ என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் ஏற்கனவே காட்பாடி பகுதியில் பணியாற்றிய போது ஐஎஃப்எஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 4 கோடி வரை முதலீடு செய்து விட்டு ஒன்றுமே அறியாதவர் போல அமைதியாக இருந்து விட்டார்.
இது தொடர்பாக இவர் மீது வருவாய் துறை ரீதியான நடவடிக்கையை இதுநாள் வரை நடத்தவில்லை. அப்படி நடத்தினால் உண்மை வெளிவரும்.
ஆனால் இந்த விசாரணையை நடத்துவதற்கு வருவாய்த்துறை தயாராக இல்லை போலும். லஞ்ச ஒழிப்புத்துறையும் அதே பாணியை பின்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பது போல அமைதி காத்து வருகிறது.
இப்படி ஒரு விஏஓவுக்கு ரூ.4 கோடி ரூ.5 கோடி என்ற அளவிற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை கண்டுபிடித்து இதுபோன்ற குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமைதி காப்பது ஏனோ? என்று தெரியவில்லை.
இதற்கு காரணம் அனைவரும் சேர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஒழித்துக் கட்டிவிட்டனர் என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பேச்சு உலா வருவது குறிப்பிடத்தக்கது. இதுதான் இப்படி என்றால் ஒரு புறம் வேலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடந்து வருகிறது.
ஜமாபந்தி என்பது ஆண்டு வருவாய் தீர்வாயம். ஜமாபந்தி வருவாய் துறையில் ஆண்டுதோறும் நடந்து வருவது ஒரு சம்பிரதாயம் போல மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் மக்களுக்கு தற்போது எந்தவித நன்மையும் இழைக்கப்படுவதில்லை என்பது சொல்லாமல் சொல்லும் அளவிற்கு இந்த ஜமாபந்தி சென்று கொண்டுள்ளது.
இது ஒரு சம்பிரதாய சடங்கு போல மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி நடந்தது.இதில் திருவலம் பிர்காவுக்கு ஜமாபந்தி நேற்று நடந்தது.
இந்த பிர்காவிற்கு நடந்த இந்த ஜமாபந்தியில் சேர்க்காடு விஏஓ இளங்கோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் என்று தெரிய வருகிறது.
அதில் மதிய உணவு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆன இளங்கோ கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து ஒரு தொகையை கறந்துள்ளார் இந்த கடமை வீரன் விஏஓ இளங்கோ. இதுவும் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் காதுகளுக்கு எட்டியது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் மிகவும் எரிச்சல் அடைந்து கொதிப்படைந்த வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், விஏஓ இளங்கோவை அழைத்து தன்னால் உச்சகட்டமாக எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டி அவரை அனுப்பி விட்டார் ஆனால் எவ்வளவு திட்டினாலும் விஏஓ இளங்கோ நன்கு தாங்குகிறார்.
இவர் மிகவும் நல்லவர் என்று பெயர் பெற்றுக் கொள்கிறார், ஏனென்றால் பணம் மட்டுமே இவரது குறிக்கோள் திட்டினாலோ, அடித்தாலும் கூட இவர் வாங்கிக் கொண்டு சென்று விடுவார் என்ற பெயரை இவர் வருவாய்த் துறையில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் திட்டினாலும் யார் உதைத்தாலும் அப்படியே ஊதி தள்ளிவிட்டு எதுவும் நடக்காதது போல சென்று விடுகிறார்
இந்த ஜகஜால கில்லாடி விஏஓ இளங்கோ என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இப்படி ஒரு விஏஓவல மாநிலத்தில் வேறு எங்கும் காண முடியாது என்றே சொல்லலாம்.
இப்படி உள்ள விஏஓ மீது வருவாய் துறை ஏன் ஒரு விசாரணை கமிஷனை அமைக்க கூடாது என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மற்றும் கிராம நிர்வாக முன்னேற்ற சங்கத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர் இவர் மீது விசாரணை கமிஷன் வைக்கப்படுமா? அல்லது கண்டும் காணாமல் விடப்படுவாரா என்பது வருவாய் துறைக்கே வெளிச்சம்.
அதேபோன்று சேர்க்காடு பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் வழங்கும் பயிர் இழப்பீடு தொகை காண சான்று வழங்க தலா ரூ.1000 பெற்றுக்கொண்டு வைக்காத பயிர்,
இல்லாத பயிர்,விளையாத பயிர் அனைத்துக்கும் சான்றிதழ் கொடுத்து ஏகபோகமாக தனது பாக்கெட்டை நிரப்பி கொள்கிறார் இந்த கடமை வீரன் விஏஓ இளங்கோ.
இப்படி என்னென்ன வழிகளில் பணம் வருகிறதோ அதற்கெல்லாம் இவர் அடிமை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பணத்தின் மீது மோகம் இவருக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது என்றே சொல்லலாம். ஆக மொத்தத்தில் இவர் ஒரு பணத்தாசை பிடித்த ஒரு பேராசைக்காரர் என்பது நிரூபணமாகியுள்ளது.
ஆக மொத்தத்தில் இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையின் கண் பட்டால் மட்டுமே இவர் சட்டத்தின் முன் சிக்கி சின்னாபின்னம் ஆவார் என்பது மட்டும் உறுதி. இவர் லஞ்ச ஒழிப்பு துறையின் பிடியில் சிக்குவாரா? சிக்கி சின்னாபின்னம் ஆவாரா?
என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அத்துடன் தான் சங்கத்தில் வட்ட பொருளாளராக உள்ளதால் என்னை எவனாலும் ஆட்டவோ அசைக்கவே முடியாது. என் மீது என்ன செய்திகள் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது என்று கொக்கரிக்கிறார் இந்த கடமை வீரன்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நான் விஜிலென்சுக்கே மாமூல் கொடுக்கிறேன். ஏனென்றால் நான் இதற்கு முன்பு காவல்துறையில் பணியாற்றியவன் எனக்கு அனைத்தும் தெரியும் என்று சிலிர்த்து கொள்கிறார் இந்த அஜாத சத்ரு விஏஓ இளங்கோ இது போன்று எங்கள் மீது அவதூறு செய்திகள் ஏதாவது வந்தாலும் நாங்கள் மேலதிகாரிகளுக்கு கப்பம் கட்டுவதால் எங்களை ஒன்றும் செய்ய இயலாது என்ற தெனாவெட்டாக பதில் சொல்லிக் கொண்டு திரிகிறார் இந்த தெனாவெட்டு பேர்வழி விஏஓ இளங்கோ.
இவருக்கு சாவு மணி அடிக்கும் நேரம் வந்து விட்டதால் இவர் இந்த முறை விசாரணை வலையிலிருந்து தப்ப முடியாது என்று சொல்கின்றனர் விஏஓக்களில் ஒரு தரப்பினர். எது உண்மை எது பொய் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்