BREAKING NEWS

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியிலுள்ள வீட்டில் 5அடி நீளம் உள்ள சாரை பாம்பு. தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,

சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியிலுள்ள வீட்டில் 5அடி நீளம் உள்ள சாரை பாம்பு. தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் ராஜலட்சுமி நகரில் ராஜா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,
இந்நிலையில் இன்று அவரது வீட்டில் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர் அப்போது அருகிலிருந்தவர்கள் வந்து பார்த்தபோது பாம்பு மூட்டைச் சந்தில் புகுந்துள்ளதுதெரியவந்தது.

 

உடனே ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வந்த தீயணைப்புத்தறையினர் நிலைய சிறப்பு அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையான படையினர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

 

இதனையடுத்து குடியிருப்பு பகுதியில் பிடித்த சாரைப்பாம்பை எடுத்து வந்து ஆத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் வனத்துறையினர் வனப் பகுதியில் சாரைப்பாம்பை விட்டனர்.

 

இதனால் குடியிருப்பு பகுதியில் பாம்பு வருவதைக் கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )