சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(86)விவசாயி. இவரது மனைவி ஜெயம்(80).இவர்களுக்கு 4 மகன்கள்,2 மகள்கள் உள்ளனர்.மூன்றாவது மகன் ராஜாவின் வீட்டில் கலியபெருமாள் மனைவியுடன் வசித்து வருகிறார்.
சொத்து பிரிக்கப்படாத நிலையில் சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் முதல் மகன் ரவிச்சந்திரனுக்கு ஒரு பகுதி சொத்து கொடுக்கப்பட்ட நிலையில் மூன்றாவது மகன் ராஜாவுக்கு சொத்தில் உள்ள ஒரு இடத்தை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இரண்டாவது மகன் பிரகாஷ் குடிபோதையில் வந்து தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்க கூறி தகராறு செய்துள்ளார். கலியபெருமாள் மறுத்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் கிடந்த தேங்காய் உரிக்க பயன்படுத்தப்படும் அறிவாலை எடுத்து கலியபெருமாளின் கழுத்தில் சராமரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்து கலியபெருமாள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.அதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஏற்கனவே கலியபெருமாள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.கலியபெருமாள் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்துள்ளனர். சொத்துக்காக பெற்ற மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.