BREAKING NEWS

சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!

சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக கட்டிடப் பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா. தனசேகரன், பொறியாளர் டார்ஜிலிங் சுஜா. செவ்வந்தி, பணி மேற்பார்வையாளர் தாஜிசுதின், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

 

Share this…

CATEGORIES
TAGS