சோளிங்கர் அருகே கல்பட்டில் பெரியாண்டவர் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு கிராம தேவதை பொன்னியம்மன் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலை கிராம தேவதை பொன்னியம்மன் சுவாமி திருக்கோவில் எதிரில் மண்ணால் பெரியாண்டவர் சிலை செய்து சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.திரளான பெண்கள் பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிப்பட்டனர்.
இதில் திரளான கிராமமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்சோளிங்கர்சோளிங்கர் கல்பட்டு கிராமம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பெரியாண்டவர் திருவிழாமுக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டம்