BREAKING NEWS

சோளிங்கர் அருகே தருமராஜா கோயிலில் பாலாலயம் எம்எல்ஏ பங்கேற்பு.

சோளிங்கர் அருகே தருமராஜா கோயிலில் பாலாலயம் எம்எல்ஏ பங்கேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் தருமராஜா கோயில் உள்ளது. இக்கோயிலில் புணரமைப்பு பணிகள் செய்து குட முழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

அதன்படி கும்பாபிஷேகம் தொடர்பாக, தருமராஜா சன்னிதியில் பாலாலயம் நடைபெற்றது. சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களின் சக்தியை, அந்த தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட அத்திப் பலகையின் மீது மாற்றி, அந்த பலகையை கோவில் வளாகத்திற்குள் தனி இடத்தில் வைத்து, நித்தியப்படி பூஜையை செய்யும் வகையில் யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

 

 

தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்களுடன் கோவிலை வலம் வந்த அர்ச்சகர்கள், பின்னர் பாலாலய மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்ஐ மோகன்ராஜ் கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS